Friday, 14 January 2011

தண்ணீர் பாம்புகள் ..

மஞ்சள் நிறத்தில் புள்ளிகளுடன 
நெளி நெளியாய் 
கையில் அலையும் 
தண்ணீர்ப் பாம்பின் 

புள்ளிகளில் நிறைத்த 
வெற்றிக் கூச்சலோடு... 
ஓடிசெல்லும் 
அரை ட்ரவுசர் சிறுவர்களை கண்டு .... 
அருகிலுருந்தவன் ... காட்டுமிராண்டி சிறுவர்கள் .. 
பாவம் பாம்பென்றான் ....

மேலும் மடிகணினியை நோண்டியபடிக்கு 
தண்ணீர்ப் பாம்புகள் 
சாதுவானவை என்றும்........ 
விஷமற்றவை ... கோளுப்ரிட்ஸ் இனத்தவை... 
குட்டியும் முட்டையும் இடும் என்றும் .. 
இன்னும் என்ன என்னனவோ 
சொல்லிகொண்டிருக்க ..... 

வாதங்கள் புறந்தள்ளி .. 
பால்யத்தை எழுப்பி கொண்டோடிய 
என் மனம் ஐக்கியமாகி விட்டிருந்தது... 
கழுத்தில் பாம்புடன் 
ஈசனாய் அவதரித்திருந்த ஓர் ஒல்லி சிறுவனின் 
பக்கத்தில் பூதகணமாய்... 

தலை தொங்கிய பாம்பு 
முணுமுனுத்துகொண்டிருந்தது... 
''தண்ணீர்ப் பாம்புகள். தண்ணீரில் தான் வசிக்கும்''.

Wednesday, 12 January 2011

கிளைத்தெழும் கனவுகள் ...

என்றோ  வெட்டி 
மழுங்கடிக்கப்பட்ட வேர்கள்..
கிளைதெழுகின்றன என் கட்டிலில்

என்பு சதை ஊடுருவி 
குருதி குடித்தபடி 
உடற்பாகங்களில் விழுதூன்றி 
வியாபிக்கிறது மரமென 

உலர்ந்த செதில்களின் 
குறுக்குவெட்டில் 
ஒளிந்திருக்கிறது 
ரம்பத்தின் பற்தடம்...

ஒளிரும் விளக்கில் உருகி 
வெள்ளை அணுக்கலேங்கும்
சுயம் இருத்தும் 
ஈர பச்சையத்துடன் ...

பூக்கள் ரத்தம் சொட்டும் 
மற்றுமொரு  இரவில் 
மீளும் 
ரம்பத்தின் தீட்டலும் கனவின் 
வேர் கிளைத்தலும்....